Tuesday, July 2, 2019

Why should I Change

Why should I Change !


I used to love pastel colours, others termed it dull !

I used to love very different shades (sometimes never used to get matching blouse... )
Others used to call it English colours !

I was a natural person, in and out,

loving nature, with flowing love for everyone,

During those times, HE used to guide me in everything.

He took care of everything, whether trivial or big

My only work was to submit a heart felt request

He took care of everything, right from "wiping out" the people around me, that were not needed for me (or taking me away from that place)

Those were the days I was on my own....

Then it happened....

I was advised to change to bright colours
I was advised to change into so many other things.....
Yes, then I started thinking I was doing everything
though, in the small gaps I could sense HIS help in everything,

I totally changed, to bright colours,
to taking everything in my hand,
to communicate more,
to do more....
always wanting to do more...
never listening to the inner feelings...


Ooof.... Alas... I went for a BIG LOSS
Losing my soul, health and character...


Thank God, now I realise !

Now I understand , my bright soul never needed bright colours,
my glowing face never needed make up

Be my side, and Always be with me,
so that I do not shudder against
those who want to change me,
those who want to fit everything into standards...
I am unique, as is everyone...
Let them allow me to be ME
and let ME allow THEM to be them......
so that we are in peaceful co-existence !

Sunday, November 25, 2018

தனிமை

நமக்கு ஒத்துவராத மக்களின் அருகில் இருந்தாலோ அவர்களிடம் பேசும் அழுத்தம் வந்தாலோ உடலும் மனதும் என்ன பாடுபடுகிறது...

தனிமையே பல சிக்கல்களுக்கு தீர்வு.. கடவுள் எல்லா சூழலையும் நமக்கு சரியாகவே படைக்கிறான். நாம் தான் அதில் பாடம் கற்றுக் கொள்ள மறந்து உள் நுழைந்து மாட்டிக்கொள்கிறோம்...

நாம் மதிப்போரை/ நம்மை மதிப்போரை தனியே சந்தித்து பேசி மகிழ்ந்து பகிர்ந்து வாழ்ந்திருந்தால் போதும் போலும். வேறெதுவும் வேறெவரும் தேவையில்லை...

அதிலும் வீண் பெருமை பேசுவோரையும் திமிர் கொண்டோரையும் பார்த்தாலே ஒதுங்க தோன்றுகிறது...

இறைவா என்னைக் காப்பாய் எல்லா சூழலிலும்.....

Thursday, February 8, 2018

வசீர் சுல்தான் Acu healer

#acutouchtherapy

எப்பொழுதும் சிலரது பேச்சு நமது ஆன்மாவை தொடுவதாக இருக்கும். அதை கருத்தூன்றி கவனிக்கும் பேறையும் இறை நமக்கு வழங்கியிருக்கும். அப்படியொரு வாய்ப்பை இறைவன் எனக்கும் வழங்கினான்.

2013 செப்டம்பர் மாதம் செம்மை அமைப்பின் குடும்ப நலக்கூடலில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அன்று வசீர் சுல்தான் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். கல்லூரி மாணவர் தோற்றத்தில் இருந்தவர் பேச ஆரம்பித்தவுடன் அனைவரது மனதையும் கவர்ந்தார்.

நமக்கு வருவது எதுவுமே நோயல்ல.. கழிவுகளின் தேக்கம் மற்றும் வெளியேற்றமே நோயெனப் புரிந்து கொள்ளப் படுவதை மிக அழகாக விளக்கினார். ஒவ்வொருவரையும் அறியப்பட்ட ஒரு நோயின் பெயரைக் கூறி அது எந்த உறுப்பின் கழிவு என சுலபமாக புரியவைத்தார்.

தான் கற்றுக்கொண்ட புதிதில் சிகிச்சை செய்த சர்க்கரை நோயாளி ஒருவரை காணொளி படம்பிடித்ததையும், அவரது முதுகில் வந்த குழிப்புண் எவ்வாறு இறையருளால் அழகாக மூடி நலமானது, குழியான போதும் பொறுமையாக (இப்பொழுதும் மருந்துகள் தேவையில்லையா என சிரித்துக் கொண்டே கேட்டு.....) அவரை இன்முகத்துடன் கவனித்துக் கொண்ட கணவர் (அதற்கும் இறையருள் துணை புரிய வேண்டும்), பின்னர் அந்த காணொளி பற்றி அறிந்த மருத்துவ அரசியல் விடுத்த மிரட்டல் என அனைத்தும் பகிர்ந்தார்.

பிறகு நண்பர்கள் கூறியபடி  (நம்மை நம்பி வருபவர்களை நலமடையச் செய்தால் போதுமானது, முழு உலகுக்கும் புரியவைப்பதோ மாற்றுவதோ நமது வேலை இல்லை, இறைவன் அதை விரும்பவும் மாட்டான்) அந்த காணொளியைத் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் கூறினார்....

அவர் கூறிய அனைத்து விஷயங்களும் எப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எனக்கு சமீபத்தில் வந்த உடல்நலக்குறைவின்போது மருத்துவர் கனகசபாபதி அவர்களின் இறைவழி மருத்துவத்தால் உடலில் மட்டுமல்ல மனநலம் கெட்டாலும் உடலில் பல சிரமங்கள் வரும் என்ற புரிதல் கிடைத்தது... சிறு சிறு உபாதைகள் தொடர்ந்து வரும் போதும் அவர் பொறுமையாக இறைவனிடம் மன்னிப்பும் ஒவ்வொரு சிறு மாற்றத்திற்கு நன்றியோடு பிரார்த்தனையும் வைத்து பொருளை நம்பாமல் இறையருளை மட்டுமே நம்பி பயணிக்க வைக்கும் போதும் மனம் மேலும் உறுதி பெற வசீர் சுல்தான் கூறிய அந்த சர்க்கரை நோயாளியின் கதை நினைவில் வந்து போகும். அவ்வளவு பெரிய குழிப்புண்ணே இறையருளால் சுகமாகும் போது நமது உபாதைகளும் இறையருளால் சரியாகும் என்று நம்பிக்கை வந்தது...

வசீர் சுல்தான் அவர்கள் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததையும் அவ்வளவு லேசாக அருமையாக விவரித்தார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்... அதுவாகவே நடந்தது எனக்கூறினார். சமீபத்தில் செந்தமிழன் அவர்கள் தனது மனைவி காந்திமதிக்கு பார்த்த (!) மூன்றாம் பிரசவமும் நினைவுக்கு வந்தது.... காந்திமதியே கூறக்கூற ஒவ்வொன்றாக செய்ததாகக் கூறினார்....

வெகு நாட்களாக வசீர் சுல்தான் அவர்களை சந்தித்து நன்றி கூற விரும்பியிருந்தேன். இன்றே அந்த வாய்ப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றி இத்துணை நல்லெண்ணத் தூதுவர்களை நம் வாழ்க்கையில் அனுப்பிக் கொடுத்தமைக்கு....

அவரது சிகிச்சை மையத்தில் எளிய பெண்கள் இருவர் அருகில் அமர்ந்திருந்தனர்.. தனது பிரச்சினைக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் அலோபதியில் மருந்து வாங்கி வருவதாகக் கூறியதாகவும் இன்னொரு பெண்ணின் மிகப்பெரிய தொந்தரவே ஒரு நொடியில் சரியானதை அறிந்து இங்கு வந்துள்ளதாகவும் பேசிக்கொண்டனர். இறைவன் மனதுவைத்தால் எந்த மனிதரையும் சரியான இடம் கொணர்ந்து சேர்ப்பார் எனப்புரிந்தது.

எனது எண் 25 ...எவ்வளவு நேரமாகும்... எனக் கேட்டுக் கொண்டேன்... 10 நிமிடங்கள் என்றார்... நம்ப முடியாமல் தான்  உள்ளே சென்றேன். அனைவரும் ஒரு நிமிடம் இரு நிமிடம் மட்டுமே சிகிச்சை பெற்று மகிழ்ச்சியாகத் திரும்பிக் கொண்டிருந்தது வியப்பை அளித்தது.. மற்றவர்களைக் காக்க வைக்காமல் நானும் வேகமாக செல்ல வேண்டுமே என்ற பதட்டத்தில் ஒழுங்காக பேச முடியவில்லை.., நான் என்ன கூறினேன் அவருக்கு என்ன புரிந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பல வருடங்களாக ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை செய்திருந்தாலும் பிரசித்தி பெற்ற ராமையா நர்சிங் ஹோம் நடத்தி தற்போது இறைவழி மருத்துவம் மட்டுமே பார்க்கும் மருத்துவர் கனகசபாபதி அவர்கள் அன்பின் ஊற்று. 10 பேர் இருப்பது போலவே தோன்றாது  (அதில் ஐந்து பேர் அலோபதி மருத்துவர்கள்) அந்த வீட்டில் ..... அவ்வளவு அமைதியும் சமாதானமும் நிலவும். ஒவ்வொரு முறை செல்லும் போதும் தனது கையாலேயே உணவும் தயாரித்து பரிமாறுவார். நான் அழைக்க மறந்தாலும் மறக்காமல் அழைத்து நலம் விசாரிப்பார். வேதம் கற்பிப்பார்.

உடல் மனம் இணைந்து வாழும் பொருட்டு (அதுவும் இந்த gst வந்தபிறகு உற்பத்திவரித்துறையில் வேலை செய்வோர் மனதைப் பிழிந்து எடுக்கும் பணி..... பலபேர் படும் அவதியைக்கண்டு...) இறையருளால் விருப்ப ஓய்வும் பெற்று வாழ்வு அமைதியும் சமாதானமும் நிறைந்து செல்கிறது.. நன்றி இறைவா..,..

Monday, February 5, 2018

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்....

இந்த படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஒருவிதமாகவும் பார்த்து முடித்தவுடன் வேறுவிதமாகவும் தோன்றியது....

மொக்கையா, காமெடியா சீரியஸா எனப் புரிந்து கொள்ள இயலாத ரகம்.,. ஆனால் நேரம் போனதே தெரியவில்லை....

திரைக்கதை இல்லாமல் கூட ஒரு படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளது...‌

காமெடியானாலும் கலைப்படைப்பு/art direction அசத்தல் (பாகுபலிக்கு நிகராக...!!)மாடர்ன் கேட்ஜடஸ் இல்லாத ஒரு நவீன யுக ஆங்கிலம் பேசும் ஆந்திர கிராமம்....

யோசித்துப் பார்த்தால் நிறைய பேரை நிறைய படங்களை பகடி செய்திருக்கிறார்கள்...(but very surtle and suggestive).... குடும்பத்தோடு சென்று சிரித்து மகிழலாம்...

கௌதம் கார்த்திக் பாத்திரம் அந்த made up heroவை ஞாபகப்படுத்தியது எனக்கு மட்டுமா...? அதிலும் அந்த உருப்படியான நண்பன் (சந்தானம் ?) நடிப்பு அருமை.‌‌..

Classic பட வரிசையில் வரும் சின்னதம்பி படத்தில் கூட நிறைய சென்டிமென்ட் அபத்தங்கள் வரும். ஆனால் இந்த படத்தில் பகடி செய்யப்படும் அத்தனை சென்டிமென்ட் அபத்தங்களும் உண்மையான உருப்படியான logical முடிவுகளும் படத்தை எங்கோ கொண்டு நிறுத்தியுள்ளன...

வழக்கம் போல விஜய் சேதுபதி எல்லா கெட்டப்பிலும் கலக்கல்..‌

Wednesday, May 31, 2017

இறைவா நன்றி
அனைத்திற்கும்
உனை என்றும் நினைக்க தயை புரிவாய்
உன்னருளால் அனைவரும் தழைத்திருக்க வரம் தருவாய்
இன்முகம் அன்புடன் வாழ அருள் புரிவாய்

Tuesday, June 12, 2012

2012 இன் நிலைமை....
நமது தாத்தா பாட்டி மற்றும் அதற்கு முந்தைய காலத்தவர் கடைப்பிடித்தவை மற்றும் பெற்றிருந்தவை...

  • நல்ல உடலுழைப்பு...மற்றும் உடலுழைப்பை மதிக்கும் மனம்
  • ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரும் அவரவர் மனம் விரும்பிய வேலை செய்தனர் (எனது தாத்தா அருமையாக சமைப்பார், பாட்டிக்கு வெளி வேலை பிடிக்கும், எப்பொழுது மோட்டார்-இல் குளிக்க சென்றாலும் கண்டிப்பாக பெரியம்மா துணியையும் சேர்த்தே எடுத்து சென்று பெரியப்பா துவைப்பார்...)
  • இயற்கை விவசாயம் செய்தனர் - அதிலும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளும் (மாடு, ஆடு கோழிகளுடன்), மாற்று பயிர் முறைகளும் (மண்ணில் உள்ள சத்துக்களை புதுப்பிக்க) அறிந்து பல்லுயிர் ஓம்பினர்.  இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்ததால் பல நோய்களை தவிர்த்தனர்.
  • உடல் நலனை பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டு மகளிரும் பல மருத்துவ முறைகளும் அறிந்திருந்தனர் 
  • ஊருக்கு ஒரு வைத்தியர் இருந்தார் அவர் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்
  • இதை தவிர, " பார்வை பார்ப்பவர்களும்"  இருந்தனர் (வலி நீக்க....எங்கள் தாத்தா மண் வெட்டியால் வெட்டு பட்டவரின் வலியையும் உடனே நீக்கும் ஆற்றல் படைத்தவர்)....தற்போதைய முறையில் இதை இறை வழி மருத்துவம் அல்லது ஹீலிங் என கூறலாம்.
  • பரபரப்பில்லாத நிதானமான வாழ்க்கை முறை 
  • மிகுந்த பொறுமை கொண்டிருந்தனர்
  • உடல் நலனை பொறுத்தவரை பல விஷயங்கள் தானே சரியாகும் என காத்திருந்தனர் ..உடல் விதிகளை அறிந்து, பெரும்பாலும் உடல் கடிகாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர்....
  • பணத்திற்கு அளவு கடந்த மரியாதை இல்லை.
  • சொத்து சேர்ப்பதிலும், பணத்தை முடக்குவதயுளும் பெரிய ஆர்வம் இல்லை
  • கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால் விட்டுகொடுக்கும் மனப்பக்குவம் இருந்தது
  • பெரியாரை மதிக்கும் பண்பும் சிறியாரை அரவணைக்கும் போக்கும் இருந்தது...
  • விரதம் மற்றும் பட்டினியாலேயே பல நோய்களை தீர்த்துக்கொண்டனர்.


எனவே அவர்கள் வாழ்ந்த சராசரி  வயது.....80 முதல் 150  வரை (நோய் நொடியின்றி, இறக்கும் வரை தனது துணியை தானே தோய்த்து, அதிகாலை எழுந்து, மன அமைதியுடன்) 
நமது அம்மா அப்பா காலத்தில்
  • பசுமை புரட்சி என்னும் பெயரால் நஞ்சு கலந்த பயிர் பாகுபாடு ஆரம்பித்தது....அதன் பலனை முதல் தலைமுறையாக கண்டவர்களாதலால் இன்னும் பலரால் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வர இயலவில்லை..
  • பொறுமை குறைந்தது......எதுவும் உடனே நடை பெற வேண்டும் என்ற ஆவல்....
  • ஓரளவு உடல் உழைப்பை மதித்தாலும் சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் அதிகம்
  • கூட்டு குடும்பங்கள் சிதைந்து தனி குடும்பங்கள் பெருகியதால் பணத்தேடல் பல கிளைகளிலும் பயணம் 
  • ஆணுக்கு இந்த வேலை (ஆண் தண்ணீர் குடிக்க கூட சமையல் அறை  வந்ததில்லை என்ற பெருமை), பெண்ணுக்கு இந்த வேலை என்ற அதீத வரையறை....
  • மகன் மகளை திட்டி அடித்து வளர்த்து, பேரன் பேத்தி எடுக்கும் காலத்திலேயே ஓரளவு பொறுமை கை வருகிறது...

விளைவு.....பலர் சர்க்கரை நோய் எனவும் இதய அழுத்தம் எனவும் மாத்திரைகளையே உணவாய் உண்டு நாட்களை கடத்திகொண்டிருக்கின்றனர்.....சராசரி வயது குறைந்து, 60 -70 -80 இல் நிற்கின்றது......90 ஐ தாண்டினால் மிகுந்த அதிசயமே....

இன்றைய தலை முறை (நாம்)

  • இரண்டு தலை முறைகளின் நிறை குறைகளை கண்டுள்ளதால், மீண்டும் இயற்கையை நோக்கிய வேட்கை....
  • உடல் உழைப்பை அவமானமாக நோக்கும் எண்ணம் ...சென்ற தலைமுறையில் அம்மா அப்பாவுடம் பகிர்ந்த வேலைகளை (வீடு பெருக்குதல், துணி தோய்த்தல்) செய்ய மனம் இல்லை....
  • மிகுந்த சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் .....
  • பெருத்த உடல் நோய்கள், உடல் சார்ந்த தொல்லைகள் 
  • நேரமின்மையால் அடி வாங்கும் உறவுகள்
  • பயணத்திலேயே செலவழியும் பாதி நேரம்
  • பணத்தை தேடி ஓடும் வாழ்க்கை முறை
  • உடல் விதிகள், இயற்கை முறைகளை அறியாமல் மருத்துவரிடமும், மருத்துவமனைகளிடமும் மாட்டி முழிக்கும் அவல நிலை....
  • சிறிதாக இருக்கும்போதே சரி செய்யாமல் நோய் முற்றிய பிறகு படும் அவஸ்தைகள்...
  • நேரத்திற்கு எதையும் செய்யும் மனப்பாங்கு குறைந்துள்ளது...எதையும் எப்படியும் செய்யலாம் என்ற விட்டேத்தி தனம் .
  • அனுபவ அறிவை கைக்கொள்ளும் மனதின்றி பெரியவர்களை மதிக்கும் தன்மை குறைந்துள்ளது....

இவர்களின் சராசரி வயதும் வயதான பின்னர் வாழ்க்கை தரமும் என்னவாக இருக்கும்.....

நாம் மாற இறைவனை வேண்டுவோம்....

Friday, June 17, 2011

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

நேற்றைய நடவுகள்
உடல் நல விழிப்புணர்வு மற்றும் அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...
மகளிர் தினத்திலிருந்து யோசித்து, ஒரு வழியாக நேற்று நடந்து முடிந்தது எங்கள் அலுவலகத்தில் ( Chennai I Commissionerate, Chennai 34)

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

மரு. ரத்னா அவர்கள் நமது வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறை மாற்றம், சிந்தனை முறை மாற்றம் மற்றும் ஓய்வு எடுக்கும் முறை பற்றி அருமையாக, எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார்கள். காலை எழுந்தவுடன் காபி, தேநீர் அருந்துவதற்கு பதிலாக, அருமையான "பசுமை குடிநீர்" ( Green Juice) அருந்துவதன் நன்மைகளை விளக்கினார்கள். ஒரு குவளை நீரை கொதிக்க வைத்த இறக்கி, அதில் ஒரு கையளவு ஏதாவது ஒரு இலை (கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, அருகம்புல்,முருங்கை இலை ) போட்டு, ஒரு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடித்து வந்தால் வயிறு மிகவும் லேசாக உணர்வீர்கள். தேவையற்ற கழிவுகள், அதிக வெப்பம் ஆகியவை வெளியேற்றப்படும். காபி, தேநீர் குடித்தே ஆக வேண்டும் என்றிருப்பவர்களும் காலை உணவிற்குப்பிறகு அருந்தலாம்...அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்....பிறகு உணவு அருந்தும் முறை. ரசித்து / சுவைத்து அருந்தும் வழக்கம் வந்தாலே, வயிற்றிற்கும், மண்ணீரலிற்கும் பாதி சுமை குறையும். ஜீரணத்தின் 70 சதவீதம் வாயில் உமிழ்நீருடன் கலந்து முடிவடைந்தாலே பாதி நோய்களை தவிர்த்து விடலாம்.....அது போல உணவு அருந்தும்போழுது பேப்பர் படிப்பது, தொலைகாட்சி பார்ப்பது போன்ற வேறு கவன சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவும் வயிற்றிற்கு நன்மை செய்யும்......

சிந்தனை முறை மாற்றம் வர நல்ல எண்ணங்களையே எண்ணி, அவற்றை நோக்கிய செயல்பாடு வேண்டும்.... ஓய்வு எடுக்க, இரவு 9-10 மணிக்குள் படுக்கைக்கு செல்லும் வழக்கம் வர வேண்டும். படுத்தவுடன் அன்று நடந்தவைகளை ஒரு கணம் நினைத்துபார்த்து, நாளைய செயல்களையும் திட்டமிட்டு முடித்தவுடன், மனதிலிருந்து அனைத்து எண்ணங்களையும் அகற்றி, அமைதியுடன் உறங்க செல்ல வேண்டும்....

பேச்சு முடிந்தவுடன், வந்திருந்தோர் பல கேள்விகளும் கேட்டனர்...மரு. ரத்னா மற்றும் மரு.தமிழவேள் அவர்கள் அழகான முறையில் விளக்கம் அளித்தனர்.....கேள்விகளில் சில, "மன நலம் சார்ந்த பிரச்சினைகளை உங்கள் முறையில் சரி செய்ய முடியுமா., புற்று நோயை குணப்படுத்த முடியுமா, அவசர கால சிகிச்சைகளை உங்களால் செய்ய முடியுமா.....நீங்கள் ஆங்கில மருத்துவ குறிப்புகளை பார்ப்பதில்லையா...."

பிறகு சிகிச்சை முறை...மரு.தமிழவேள் அவர்கள் இறைவழி முறையிலும், மற்ற மருத்துவர்கள் (ரத்னா, மாலினி, கற்பகம், பவானி, செல்வி) அக்குபஞ்சர் முறையிலும் சிகிச்சை அளித்தனர்.....அனைவருக்கும் நாடிப்பரிசோதனை செய்து தேவைப்பட்டோருக்கு சிகிச்சையும் மற்றவர்க்கு நலமாய் வாழ நுண்ணழுத்தப்புள்ளிகளை எவ்வாறு அழுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுத்தனர்....

முகாமிற்கு வந்தவர்களுக்கு ஒரு சிறு தொகை வாங்கி உபயோகமான உடல் நலக்குறிப்புகள் அடங்கிய ஒரு கையேடு மற்றும் குளியல் போடி ஒரு பொட்டலமும் தரப்பட்டது.....

மிகவும் உபயோகமுள்ளதாக அனைவரும் உணர்ந்தனர். இதில் கலந்து கொள்ள விடுபட்டோரும் வந்தோர் அனுபவம் கேட்டு, பிறிதொரு முறை நடக்குமா என விசாரித்த வண்ணம் உள்ளனர்.........